* மாதுமை தளம் இனி தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் / உலக அம்மாக்களின் துயரம் மாதுமை கவிதை கருத்தாடல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது / ''ஒற்றைச் சிலம்பு'' கவிதைத்தொகுப்பு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது / தொடர்புகளுக்கு mathumai.sivasubramaniam@gmail.com *

Tuesday, August 12, 2008

திரவப்பாடல்

-------------------------------------------------
கைக்கெட்டிய தூரத்தில் தான் இருந்தது
அந்த திரவக் குடுவை.

திரவம்

நினைவு தெரிந்த நாள் முதலாய்
தளும்பிக் கொண்டிருந்தது.

வட்ட அலை இட்ட படியே
சதா மிதந்து கொண்டிருந்தது
மையத்தில் தொடங்கி விளிம்பு வரை.

மெல்லிய பூமி அதிர்வுத் தாளத்தில்
பாடிக் கொண்டிருந்தது
ஒலி இல்லாத பாடலைப் ஒன்றை.

எந்த குறுக்கீடுகளும் எந்த நேரத்திலும்
பாடலை நிறுத்தி விடுமென்ற போதிலும்

அரிச்சந்திரனுக்கு
சந்திரமதித் தாலி போல
எனக்கு மட்டும்
கேட்டுக் கொண்டிருந்தது
அந்த
மௌனப் பாடல்.
------------------------------------------
மாதுமை
---------------------

No comments: