
By மாதுமை
அந்த நிமிடங்களில் நீயாக நீயிருக்கவில்லை
உன்னுள் இருந்த
மதுபோதை ஒருபுறம் காமப்பசி மறுபுறம்
இரண்டின் வெளிப்பாட்டிலும்
நீ புணரும் மிருகமானாய்
காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்கு கசிய மறுத்தது
உன் விடாப்பிடியான போராட்டத்தினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண்குறி
ஓன்று. இரண்டு. மூன்று என
என் யோனித்துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலை விட மனது வலித்தது
உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது
வழமையாய் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக்காற்றின்
மதுநெடி சாட்டையடித்தது
எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனத்தில் நிழலாடியது
இதைத்தானா
“பெண் பொறுப்பதற்குப்
பிறந்தவள்” என்றாய் அம்மா?
என் உயிரின் கடைசிச் சொட்டு
பலம் வரைப் பொறுத்திருந்தேன்
அப்பாடா
உன் நீர் கசிந்து
நீ மனிதனானாய்
என்ன உணர்ந்தாயோ
“பசிக்குதா?” என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின்
குரல் தழும்ப
“வலிக்குது” என்றேன்
எந்தப் பதட்டமும் இல்லாமல்
“ஸாரிடா செல்லம்” என்றாய்
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர் துளிகள்
மௌனமாய் வழிந்தன
சில நிமிட மௌனங்கள்
எங்கே என் தலைகோதி
என்னை வருடிக்கொடுப்பாயோ
என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது
உன் தாகம்
உன் தேவை- தீர்ந்ததால்
உனக்கு உறக்கம்
என் வலி
என் அழுகை-ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன்.
------------------------------
அந்த நிமிடங்களில் நீயாக நீயிருக்கவில்லை
உன்னுள் இருந்த
மதுபோதை ஒருபுறம் காமப்பசி மறுபுறம்
இரண்டின் வெளிப்பாட்டிலும்
நீ புணரும் மிருகமானாய்
காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்கு கசிய மறுத்தது
உன் விடாப்பிடியான போராட்டத்தினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண்குறி
ஓன்று. இரண்டு. மூன்று என
என் யோனித்துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலை விட மனது வலித்தது
உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது
வழமையாய் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக்காற்றின்
மதுநெடி சாட்டையடித்தது
எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனத்தில் நிழலாடியது
இதைத்தானா
“பெண் பொறுப்பதற்குப்
பிறந்தவள்” என்றாய் அம்மா?
என் உயிரின் கடைசிச் சொட்டு
பலம் வரைப் பொறுத்திருந்தேன்
அப்பாடா
உன் நீர் கசிந்து
நீ மனிதனானாய்
என்ன உணர்ந்தாயோ
“பசிக்குதா?” என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின்
குரல் தழும்ப
“வலிக்குது” என்றேன்
எந்தப் பதட்டமும் இல்லாமல்
“ஸாரிடா செல்லம்” என்றாய்
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர் துளிகள்
மௌனமாய் வழிந்தன
சில நிமிட மௌனங்கள்
எங்கே என் தலைகோதி
என்னை வருடிக்கொடுப்பாயோ
என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது
உன் தாகம்
உன் தேவை- தீர்ந்ததால்
உனக்கு உறக்கம்
என் வலி
என் அழுகை-ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன்.
------------------------------
3 comments:
மாதுமை!! இப்படியொரு கவிதை நான் படித்ததில்லை!!!மிக ஆழமான உணர்வுகளை அற்புதமாகச்சொல்லியிருக்கிறீர்கள்!!
nalla kavithai
www.maatrupirathi.tk
Post a Comment